Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸை சுட்ட ரவுடிக்கு வக்காலத்து: டிரெண்டாகும் #fake_encounter!!

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (13:07 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #fake_encounter என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 
 
உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரில் பகுதியில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே என்பவனை கைது செய்வதற்காக கடந்த 2-ந்தேதி இரவில் அவனது கிராமமான பிக்ருவுக்கு போலீசார் சென்றபோது தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசார் மீது சரமாரியாக விகாஸ் துபே சுட்டதில் 8 போலீசார் பலியாகினர்.  
 
உபி முழுவதும் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க 25-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் அம்மாநில போலீசார் விகாஸ் துபேயை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். 
 
இதனையடுத்து மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து விசாரணைக்காக உபி மாநிலத்திற்கு அழைத்து வரும் வழியில் கார் விபத்துக்குள்ளாகியதகா தெரிகிறது. அப்போது அந்த சமயம் காயமடைந்த போலீஸ் ஒருவர் துப்பாக்கியை எடுத்து மற்ற காவலர்களை சுட்டுள்ளார், தப்பிக்கவும் முயன்றுள்ளார்.   
 
எனவே போலீஸார் தற்காப்புக்காக என்கவுண்டர் நடத்தியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் சம்பவம் திட்டமிட்ட செயல் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.  
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,  விகாஸ் துபேவை அழைத்துச்சென்ற கார் கவிழவில்லை, கவிழ்க்கப்பட்டுள்ளது. அரசு தனது ரகசியத்தை காப்பாற்றிக்கொள்ள காரை கவிழ்த்துள்ளது என சர்ச்சைக்குள்ளான கருத்தை தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில், சமூக வலைத்தளமான டிவிட்டரில் #fake_encounter என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட என்கவுண்டர் எனவும் சரண்டர் ஆன ஒருவன் ஏன் தப்பிக்க நினைக்க வேண்டும் எனவும் பலர் கமெண்ட் செய்து வரும் நிலையில் சிலரோ, 8 போலீஸாரை கொன்றவனுக்கு எப்படி ஆதரவு தெரிவிக்கிறீர்கள் என கேள்வியும் எழுப்பி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments