Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

Webdunia
புதன், 16 மார்ச் 2016 (12:38 IST)
ஆந்திரா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள ஒரு விடுதியில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிச் தொகுப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


 

 
ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் நிரோஷா. இவர், செகந்திராபாத்தில் உள்ளஒரு  தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வேலை செய்து வந்தார்.
 
இந்நிலையில், செகந்திராபாத்தில் உள்ள தனியார் விடுதியில் நிரோஷா தூக்கில் பிணமாகத் தொங்கினார்.
 
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
 
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நிரோஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், நிரோஷா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
 
அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், தொலைபேசியில் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து, அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
காதல் விவகாரம் காரணமாக அவர்  தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இவரது காதலன் கனடாவில் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், இவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குறைவான ஏடிஎம் மையங்கள்? பெருநகர் வளர்ச்சி குழுமம் விளக்கம்!

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

Show comments