Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் - டி.ஆர்.எஸ். கட்சி அதிரடி!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (11:43 IST)
பிரதமர் மோடிக்கு எதிராக மாநிலங்களவையில் டி.ஆர்.எஸ். கட்சி உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. 

 
சமீபத்தில் பிரதமர் மோடி மாநிலங்களவையில், நாடாளுமன்றத்தின் கதவுகளை மூடிவிட்டு தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியதாக பேசியிருந்தார். அதாவது தெலுங்கானா மாநிலம் முறையாக உருவாக்கப்படவில்லை என்பதனை அவர் குறிப்பிட்டதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாநிலங்களவையில் டி.ஆர்.எஸ் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி மாநிலங்களவையில் தெலங்கானா குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.எஸ் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். 
 
மேலும் பிரதமர் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.எஸ். கட்சி எம்.பி.க்கள் பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதோடு டி.ஆர்.எஸ். கட்சி உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments