Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் கைது! – அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கிய மக்கள்!

Prasanth Karthick
சனி, 6 ஜனவரி 2024 (09:07 IST)
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவரை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.



நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் அரசியல் பிரமுகர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று முதலாக மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சங்கர் ஆத்யா வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

பொது விநியோக திட்டத்தில் முறைகேடு செய்ததாக அவரது வீட்டில் சுமார் 17 மணி நேரம் சோதனை செய்த அமலாக்கத்துறையினர் சில ஆவணங்களை கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான விசாரணைக்காக சங்கர் ஆத்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

சங்கர் ஆத்யா கைதை எதிர்த்து அப்பகுதி மக்கள் சிலர் அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments