Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கைகள் சேலை அணிய கூடாது: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!

திருநங்கைகள் சேலை அணிய கூடாது: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (17:51 IST)
திருநங்கைகள் சேலை அணியக் கூடாது எனவும் அவர்கள் ஆண்களை போல பேண்ட் சட்டை அணிய வேண்டும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மஹாராஷ்டிரா மாநிலத்தில் செயல்படும் இந்திய குடியரசு கட்சியின் தலைவராக இருக்கும் ராம்தாஸ் அத்வாலே ராஜ்யசபா உறுப்பினராகவும் மத்திய இணையமைச்சராகவும் உள்ளார்.
 
இவர் நேற்று ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருநங்கைகள் ஆண்களோ, பெண்களோ இல்லை. அவர்கள் மனிதர்கள். அவர்கள் பெண்ணாக இல்லாத போது ஏன் சேலை அணிய வேண்டும். அதற்கு பதிலாக பேண்ட் சட்டை அணிய வேண்டும் என கூறினார்.
 
திருநங்கைகள் ஆண்களுக்கான உடையை தான் அணிய வேண்டும். அவர்கள் சேலை அணியக்கூடாது என்பது எனது கருத்து என அத்வாலே திருநங்கைகளுடனான ஆலோசனை கூட்டத்திலும் கூறியதாக தெரிவித்துள்ளார்.
 
இவர் கூறிய இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடை அணிவது அவரவர் விருப்பம் என திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸப் க்ரூப்! - தமிழ்நாடு ரயில்வே போலீஸ் அசத்தல் நடவடிக்கை!

அடுத்த கல்வியாண்டு முதல் 9 - 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: சி.பி.எஸ்.இ.

GPU உருகிடுச்சு.. விட்ருங்க சாமீ..! - Ghiblify மோகத்தால் கண்ணீர் விட்டு கதறிய சாட்ஜிபிடி CEO!

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments