Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கைகள் சேலை அணிய கூடாது: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!

திருநங்கைகள் சேலை அணிய கூடாது: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (17:51 IST)
திருநங்கைகள் சேலை அணியக் கூடாது எனவும் அவர்கள் ஆண்களை போல பேண்ட் சட்டை அணிய வேண்டும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மஹாராஷ்டிரா மாநிலத்தில் செயல்படும் இந்திய குடியரசு கட்சியின் தலைவராக இருக்கும் ராம்தாஸ் அத்வாலே ராஜ்யசபா உறுப்பினராகவும் மத்திய இணையமைச்சராகவும் உள்ளார்.
 
இவர் நேற்று ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருநங்கைகள் ஆண்களோ, பெண்களோ இல்லை. அவர்கள் மனிதர்கள். அவர்கள் பெண்ணாக இல்லாத போது ஏன் சேலை அணிய வேண்டும். அதற்கு பதிலாக பேண்ட் சட்டை அணிய வேண்டும் என கூறினார்.
 
திருநங்கைகள் ஆண்களுக்கான உடையை தான் அணிய வேண்டும். அவர்கள் சேலை அணியக்கூடாது என்பது எனது கருத்து என அத்வாலே திருநங்கைகளுடனான ஆலோசனை கூட்டத்திலும் கூறியதாக தெரிவித்துள்ளார்.
 
இவர் கூறிய இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடை அணிவது அவரவர் விருப்பம் என திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அமைச்சர்கள் சிறைக்கு போயும் ராஜினாமா பண்ணல! இந்த சட்டம் அவசியம்! - அமித்ஷா தாக்கு!

கர்ப்பிணி மனைவியை கண்டந்துண்டமாய் வெட்டிய காதல் கணவன்! - தெலுங்கானாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

டிராபிக் போலீஸ் மீது மோதிய கார்.. 100 மீட்டர் தூரத்தில் விழுந்த பரிதாபம்.. மருத்துவமனையில் கவலைக்கிடம்..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்..!

தன்னை மதிக்காமல் திருமணம்! மனைவி, மகனுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்! - நெல்லையில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments