Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை வாக்கு எண்ணிக்கை எதிரொலி: போக்குவரத்தில் திடீர் மாற்றம்;

Webdunia
புதன், 22 மே 2019 (11:44 IST)
நாடு முழுவதும் நாளை மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. நாளை இரவுக்குள் அடுத்த ஆட்சியை அமைப்பது யார்? என்பது தெரிந்துவிடும்
 
இந்த நிலையில் புதுச்சேரி பாராளுமன்றம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை எண்ணப்படுகிறது. இதனையடுத்து லாஸ்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஏர்போர்ட் சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேபோல் நாவலர் நெடுஞ்செழியன் மேல்பள்ளி சாலை முதல் நாவற்குளம் சந்திப்பு வரையிலும்,  வள்ளலார் சாலையில் இருந்து உழவர்சந்தை வரையிலும் போக்குவரத்து தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் போக்குவரத்து தடை இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் எண்ணிக்கை முடியும் வரை அமலில் இருக்கும் என்றும், எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மாற்றுபாதையை பயன்படுத்துமாறு போக்குவரத்து போலீசார்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் புதுச்சேரி அரசு கேட்டுக்கொண்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments