Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் மீது டிராக்டர் மோதல் - 5 மல்யுத்த வீரர்கள் உட்பட 6 பேர் பலி

Webdunia
சனி, 13 ஜனவரி 2018 (13:48 IST)
மகாராஷ்டிர மாநிலம் சங்லி மாவட்டத்தில் கார் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 மல்யுத்த வீரர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் சங்லி மாவட்டத்தில் இன்று அதிகாலை சொகுசு கார் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 5 மல்யுத்த வீரர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். ஆந்த் கிராமத்தில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு விட்டு, வீரர்கள் காரில் திரும்பி கொண்டிருந்தபோது கடேகான்-சங்லி சாலையில் இந்த விபத்து  ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் நொறுங்கியது. விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments