Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் மீது டிராக்டர் மோதல் - 5 மல்யுத்த வீரர்கள் உட்பட 6 பேர் பலி

Webdunia
சனி, 13 ஜனவரி 2018 (13:48 IST)
மகாராஷ்டிர மாநிலம் சங்லி மாவட்டத்தில் கார் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 மல்யுத்த வீரர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் சங்லி மாவட்டத்தில் இன்று அதிகாலை சொகுசு கார் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 5 மல்யுத்த வீரர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். ஆந்த் கிராமத்தில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு விட்டு, வீரர்கள் காரில் திரும்பி கொண்டிருந்தபோது கடேகான்-சங்லி சாலையில் இந்த விபத்து  ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் நொறுங்கியது. விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments