Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரண்ட் இல்லாததால் டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் : தாயும் சேயும் உயிரிழந்த சோகம்!

Mahendran
வெள்ளி, 3 மே 2024 (11:18 IST)
மும்பையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் கரண்ட் இல்லாததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த நிலையில் தாயும் சேயும் பரிதாபமாக உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
மும்பையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் சாஹிதுன் என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பிரசவம் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தடையானது 
 
இதனை அடுத்து டார்ச் மூலம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த நிலையில் தாய் மற்றும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்பட்டது. அறுவை சிகிச்சையின் போதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஜெனரேட்டர் செயல்படாமல் இருந்ததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்க்கப்பட்டதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயிர் இழந்த பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர் 
 
இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments