Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 1 முதல் டோல்கேட் கட்டணம் உயர்கிறதா? அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (17:54 IST)
ஏற்கனவே டோல்கேட் கட்டணம் அதிகம் இருப்பதால் டோல்கேட் கட்டணத்தை நிறுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஏப்ரல் ஒன்று முதல் டோல்கேட் கட்டணம் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏப்ரல் 1 முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் டோல்கேட் கட்டணங்கள் ஐந்து சதவிதம் முதல் 10 சதவிதம் வரை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
டோல்கேட் கட்டண உயர்வு குறித்து அறிக்கையை நெடுஞ்சாலை துறை அமைச்சகத்திடம் நெடுஞ்சாலை துறை ஆணையம் வரும் 25ஆம் தேதி சமர்ப்பிக்க உள்ளதாகவும் அமைச்சகத்தின் அனுமதி கிடைத்ததும் ஏப்ரல் ஒன்று முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
பாஸ்ட் ட்ராக் முறையில் தற்போது கட்டண வசூல் நடப்பதால் தானாகவே ஏப்ரல் ஒன்று முதல் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போதைய கட்டணத்தை விட 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments