Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜஸ்தானில் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுமி

ராஜஸ்தானில் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுமி
, திங்கள், 5 அக்டோபர் 2015 (07:37 IST)
ராஜஸ்தானில் ஆழ்குழாய்க்கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது.


 
 
ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் உள்ள பிகரிபுரா கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி. இரண்டு வயதுடைய ஜோதி நேற்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
 
அப்போது அருகில் இருந்த ஆழ்குழாய்க் கிணறு திறந்த நிலையில் இருந்ததை கவனிக்காத ஜோதி. அதில் கால் இடறி உள்ளே விழுந்தார்.  இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர், ஆழ்குழாய் கிணற்றின் அருகே மிகப்பெரிய பள்ளத்தை தோண்டி குழந்தையை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையும் ஈடுபட்டுள்ளது. இன்று பிற்பகலுக்குள் குழந்தை ஜோதி மீட்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil