Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ராஜ்யசபா தேர்தல்: 19 புதிய எம்பிக்கள் யார் யார்?

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (07:19 IST)
கொரோனா பரபரப்பு நாடு முழுவதும் இருந்து வரும் நிலையில் நாட்டின் 8 மாநிலங்களில் 19 ராஜ்யசபா எம்.பி.களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
 
காலியாக 24 ராஜ்யசபா எம்.பி.களுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் 5 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டதால் மீதியுள்ள 19 எம்பிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
 
கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜகவின் இரன்னா கடாடி, அசோக் கஸ்தி ஆகியோரும் அருணாசலப் பிரதேசத்தில் பாஜகவின் நாபம் ரெபியா ஆகிய ஐவர் போட்டியின்றி ஏற்கனவே ராஜ்யசபா எம்பியாக தேர்வாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆந்திரா, குஜராத்தில் தலா 4 இடங்கள், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்கள், ஜார்க்கண்ட்டில் 2, மணிப்பூர், மிசோரம், மேகாலயாவில் தலா 1 என மொத்தம் 19 எம்.பி. இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது
 
19 இடங்களுக்குமான வாக்குப் பதிவு இன்று மாலை முடிவடைந்தவுடன் உடனே வாக்குகள் எண்ணப்பட்டு இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments