Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் 3,402, கர்நாடகாவில் 9540 பேர்: இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (20:39 IST)
கேரளாவில் இன்று கொரோனா தொற்றால் 3,402  பேர் பாதிப்பு அடைந்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனாவில் இருந்து 70921 பேர் குணம் அடைந்துள்ளதாகவும், கேரளாவில் கொரோனா பாதிப்புடன் 24,549 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
அதேபோல் தமிழகத்தின் இன்னொரு அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 9540 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். கர்நாடகாவில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 128 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும், கர்நாடகாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,21,730 ஆக உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து 3,15,433 பேர் குணம் அடைந்துள்ளனர் என்பதும், கர்நாடகாவில் கொரோனா பாதிப்புடன்  99,470 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை போலவே கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments