Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் அடுத்த முதல்வர் யார்? இன்று எம்எல்ஏக்கள் கூட்டம்

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (07:38 IST)
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெற்றது என்பதும் அந்தக் கூட்டணி 125 தொகுதிகளில் வென்றது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் பீகாரின் அடுத்த முதல்வர் நிதிஷ்குமார் தான் என ஏற்கனவே பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் முறைப்படி இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்படவுள்ளார். முதல்வர் பதவியை தான் கோரவில்லை என்றும் நிதிஷ்குமார் ஏற்கனவே கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 75 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதாதளம் 45 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தாலும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதீஷ் குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுத் தர பாஜக முன்வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
ஆனால் அதே நேரத்தில் உள்துறை உள்பட முக்கிய அமைச்சர் பதவியை பாஜக வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முதல்வராக நிதிஷ்குமார் இருந்தாலும் முக்கிய துறைகள் அனைத்தும் பாஜக வசம் இருக்கும் என்பதால் பாஜக தலைமையிலான ஆட்சியை நடைபெறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
இன்று நண்பகல் 12 மணிக்கு பாட்னாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் முதல்வர் வேட்பாளர் முறையாக அறிவிக்கப்படுவார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments