ராணுவ பலத்தை அதிகரிக்க.. தளபதிக்கு கூடுதல் அதிகாரம்..! - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

Prasanth Karthick
வெள்ளி, 9 மே 2025 (16:34 IST)

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்து வரும் நிலையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் எழுந்துள்ள நிலையில் கடந்த 7ம் தேதி இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம் தாக்கி அழிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பாகிஸ்தான் பூன்ச் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியானார்கள்.

 

மேலும் பாகிஸ்தான் 15 இந்திய நகரங்கள் மீது நடத்த முயன்ற தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்தது. போர் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில் ராணுவத்திற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக ராணுவ தளபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் கூடுதல் அதிகாரங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.

 

அதன்படி, ராணுவத்திற்கு பணியாளர்களை சேர்ப்பது, ராணுவ நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்துவது, நாட்டின் பிற பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களை எல்லையில் பயன்படுத்துவது தொடர்பான உத்தரவுகளுக்கு கூடுதல் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments