Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முழுகடையடைப்பு போராட்டம்: இரு மாநில எல்லையிலும் பலத்த பாதுகாப்பு

முழுகடையடைப்பு போராட்டம்: இரு மாநில எல்லையிலும் பலத்த பாதுகாப்பு
, வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (10:40 IST)
காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டத்தை கண்டித்து தமிழகத்தில் முழுகடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் இரு மாநில எல்லையிலும் பலத்த பாதுகாப்பு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


 

 
காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. அந்த கலவரத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர், தமிழக கடைகள் அடித்து உடைக்கப்பட்டன, தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
 
இதைக்கண்டித்து தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் வணிகர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய முழுகடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. பல இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடந்து வருகிறது.
 
இதனால் இரு மாநில எல்லையிலும் பலத்த பாதுகாப்புடன் தூப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை நிறுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேமுதிக உண்ணாவிரதத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை : பின்னணி என்ன?