ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

Siva
ஞாயிறு, 7 ஜனவரி 2024 (18:29 IST)
ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை என கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் இந்த விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் எங்களுக்கு இன்னும் அழைப்பு வரவில்லை என கர்நாடக மாநில துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு வருகை தர எனக்கோ, எங்கள் முதலமைச்சருக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் ராம பக்தன், அனுமார் பக்தன், நாங்கள் இங்கிருந்து பிரார்த்தனை செய்கிறோம், எங்கள் பக்தியை நாங்கள் எங்கள் இதயத்தில் வைத்திருக்கிறோம், இதில் அரசியல் செய்ய மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

ஸ்விக்கி, ஸொமட்டோ டெலிவரி ஊழியர்கள் லிஃப்டை பயன்படுத்த கூடாது.. போர்டு வைத்து சிக்கலில் சிக்கிய ஓட்டல்..!

வெங்காயம் - பூண்டு சண்டையால் விவாகரத்து! 23 வருட திருமண உறவுக்கு முடிவு..!

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments