Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் அமல்.. இதுதான் எனது கனவு: டி.கே. சிவக்குமார்

Mahendran
வியாழன், 18 ஏப்ரல் 2024 (16:35 IST)
தமிழ்நாட்டில் நாளை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் இன்று கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் மேகதாது அணை கட்டுவது தான் தனது கனவு என்றும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் அமல்படுத்தபடும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேகதாது அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநில அரசு தெரிவித்து வருகிறது. 
 
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை கூட்டணியாக இருந்த போதிலும் தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சி மேகதாது அணையை எதிர்த்து வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் ஆட்சி மேகதாது அணையை ஆதரித்து பேசி வருகிறது.
 
இந்த நிலையில் நாளை தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று மேகதாது அணை குறித்து கர்நாடக மாநில துணை முதல்வர் பேசியிருப்பது தமிழக வாக்காளர்கள் மத்தியில் காங்கிரஸ் மீதான அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments