Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்டியலில் விழுந்த சில்லரைகளை உருக்க திருப்பதி தேவஸ்தனம் திட்டம்!

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (17:54 IST)
திருப்பதி உண்டியலில் காணிக்கையாக போடப்பட்ட சில்லரைகளை உருக்க திருப்பதி தேவஸ்தனம் முடிவு செய்துள்ளது. 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்தக்கூடிய உண்டியல் காணிக்கை மூலம் தினந்தோறும் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வசூலாகிறது. இதில் சில்லரைகளும் அடக்கம். 
 
இதில், சில்லரை நாணயங்களின் 25 பைசாவிற்கு கீழுள்ள நாணயங்களை மாற்ற ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கிய போது தேவஸ்தான அதிகாரிகள் அதனை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
 
இதனால் தற்போது இந்த சில்லரைகளை மாற்ற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, இதனை உருக்குவதற்கு ரிசர்வ் வங்கியிடம் தேவஸ்தானம் அனுமதி கேட்டது. ரிசர்வ் வங்கி அனுமதி அளித்த நிலையில் குவிந்துள்ள 80 டன் நாணயங்களை உருக்க தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் முறையீடு..

சென்னை சூளைமேடு மழைநீர் கால்வாயில் வாய் கட்டப்பட்ட நிலையில் சடலம்: மாநகராட்சியில் பரபரப்பு

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு: மத்திய அரசுக்கு CPI இரா.முத்தரசன் வேண்டுகோள்

நடனமாடி கொண்டிருந்தபோது பிரிந்த உயிர்! ஓணம் கொண்டாட்டத்தின்போது சோகம்..!

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்! 800 பேர் பலி! - ஓடிச்சென்று உதவிய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments