Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்டியலில் விழுந்த சில்லரைகளை உருக்க திருப்பதி தேவஸ்தனம் திட்டம்!

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (17:54 IST)
திருப்பதி உண்டியலில் காணிக்கையாக போடப்பட்ட சில்லரைகளை உருக்க திருப்பதி தேவஸ்தனம் முடிவு செய்துள்ளது. 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்தக்கூடிய உண்டியல் காணிக்கை மூலம் தினந்தோறும் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வசூலாகிறது. இதில் சில்லரைகளும் அடக்கம். 
 
இதில், சில்லரை நாணயங்களின் 25 பைசாவிற்கு கீழுள்ள நாணயங்களை மாற்ற ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கிய போது தேவஸ்தான அதிகாரிகள் அதனை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
 
இதனால் தற்போது இந்த சில்லரைகளை மாற்ற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, இதனை உருக்குவதற்கு ரிசர்வ் வங்கியிடம் தேவஸ்தானம் அனுமதி கேட்டது. ரிசர்வ் வங்கி அனுமதி அளித்த நிலையில் குவிந்துள்ள 80 டன் நாணயங்களை உருக்க தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

பரந்தூர் பிரச்சினை முதல் டாஸ்மாக் ஊழல் வரை! - தவெக கொண்டு வந்த 17 தீர்மானங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments