Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி விஐபி கட்டண உயர்வு – தேவஸ்தான கமிட்டியின் மாஸ்டர் பிளான் !

Webdunia
சனி, 7 செப்டம்பர் 2019 (09:02 IST)
திருப்பதியில் விஐபி கட்டணத்தை 20,000 ரூபாயாக உயர்த்த திருப்பதி தேவஸ்தான் கமிட்டி முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இதுவரை விஐபிகள் ரூ 500 கட்டணத்தில் எல்1, எல்2, எல்3 ஆகிய 3 பிரிவுகளில் அனுப்பப்பட்டு வந்தனர். இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. 

இதனால் இந்த 3 விதமான விஐபி கட்டண முறை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து விஐபி டிக்கெட் விலையை ரூபாய் 20,000 ஆக உயர்த்தப்பட இருப்பதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த டிக்கெட் வாங்குபவர்கள் ஏழுமலையானுக்கு மிக அருகில் அதாவது குலசேகர ஆழ்வார்படி வரை அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

நாடு முழுவதிலும் இருந்து வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நாடெங்கும் மேலும் பல ஏழுமலையான் கோவில்களைக் கட்ட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு நிதி திரட்டவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments