Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் சிறப்பு தரிசனம்! – 72 மணி நேரத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (09:50 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு தரிசனத்திற்கான அக்டோபர் மாத டிக்கெட்டுகள் 72 மணி நேரத்தில் விற்று தீர்ந்துள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனால் அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு தரிசனத்திற்கான ரூ.300 டிக்கெட்டுகள் அக்டோபர் 5ம் தேதிக்கு பிறகு உள்ள 24 நாட்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக விநியோகிக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 24 நாட்களுக்கு டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 72 மணி நேரத்தில் மொத்தமாக 6 லட்சம் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன. இதன்மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments