Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் சிறப்பு தரிசனம்! – 72 மணி நேரத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (09:50 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு தரிசனத்திற்கான அக்டோபர் மாத டிக்கெட்டுகள் 72 மணி நேரத்தில் விற்று தீர்ந்துள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனால் அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு தரிசனத்திற்கான ரூ.300 டிக்கெட்டுகள் அக்டோபர் 5ம் தேதிக்கு பிறகு உள்ள 24 நாட்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக விநியோகிக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 24 நாட்களுக்கு டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 72 மணி நேரத்தில் மொத்தமாக 6 லட்சம் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன. இதன்மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments