Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதிக்கு செல்லும் பேருந்துகளிலேயே ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (08:39 IST)
திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்தில் வரும் பக்தர்களுக்கு 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 

 
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க முன்பதிவு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பலரால் ஆன்லைன் புக்கிங் மேற்கொள்ளப்பட முடியவில்லை. இந்நிலையில் சென்னை, புதுச்சேரி, பெங்களூரு நகரங்களில் இருந்து திருப்பதி செல்லும் ஆந்திர பேருந்துகளிலேயே பக்தர்கள் 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெறும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தினந்தோறும் ஆயிரம் டிக்கெட்டுகள் பயணிகளுக்கு வழங்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments