Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழிவறையில் வீசிய சிகரெட்; தீப்பற்றி எரிந்த திருமலா எக்ஸ்பிரஸ்! – திருப்பதியில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (09:52 IST)
திருப்பதி ரயில் நிலையத்தில் நின்ற திருமலா எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டிணத்திலிருந்து திருப்பதிக்கு தினம்தோறும் திருமலா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 17488) இயக்கப்பட்டு வருகிறது. விசாகப்பட்டிணத்தில் முதல் நாள் மதியம் 2 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அடுத்த நாள் அதிகாலை 5.20க்கு திருப்பதியை வந்தடைகிறது.

இன்று திருமலா எக்ஸ்பிரஸ் திருப்பதியை வந்தடைந்து நின்று கொண்டிருந்தபோது அதன் ஒரு பெட்டியிலிருந்து புகை வெளியேறியுள்ளது. இதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு விரைந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ஊழியர்கள் தீயை அணைத்தனர்.

பயணி ஒருவர் ரயிலின் கழிவறையில் சிகரெட் பிடித்துவிட்டு அணைக்காமல் போட்டு சென்றதே தீ விபத்திற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சிகரெட் பிடித்த பயணியை தேடி வருகின்றார்களாம். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு எழுந்தது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments