Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டம்; திருப்பதியில் கூடுதல் அனுமதி!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (13:56 IST)
திருப்பதி தேவதானத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு தினசரி அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு தரிசனத்திற்கான அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி விதிமுறைகளுக்கு உட்பட்டு சிறப்பு தரிசன கட்டணத்தின் அடிப்படையில் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்தில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தர்களும், நன்கொடை மற்றும் விஐபி பக்தர்கள் தரிசனம் என மொத்தமாக நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் குவிந்து வரும் நிலையில் பலர் தரிசன அனுமதி கிடைக்காமல் ஏமாந்து போகும் சூழலும் உள்ளது. இதை கருத்தில் கொண்டுள்ள திருப்பதி தேவஸ்தான் இலவச தரிசனத்திற்கான அனுமதியை 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. இதனால் மக்கள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments