Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாஜ்பாய் இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டு பின் மன்னிப்பு கேட்ட திரிபுரா ஆளுனர்

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (15:18 IST)
திரிபுரா ஆளுனர் தத்தகட்டா ராய், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாய் இறந்துவிட்டதாக தவறான செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.
முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவரது உடல்நிலை மோசமானதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்
 
வாஜ்பாயின் உடல்நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவரது உடல்நிலை  மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை  தற்பொழுது அறிக்கை வெளியிட்டுள்ளது. 
இதன் எதிரொலியாக, ஆகஸ்ட் 18, 19 நடக்கவிருந்த பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் திரிபுரா ஆளுனர் தத்தகட்டா ராய், வாஜ்பாய் இறந்துவிட்டதாக தவறான செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டார். இந்த தகவல் வேகமாக பரவியது.
பின் சற்று நேரத்தில் தனது டிவீட்டை டெலீட் செய்த ஆளுனர், ஒரு சேனலில் தவறாக செய்தி வெளியிடப்பட்டதைப் பார்த்து, டிவீட் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments