Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிபுராவில் இன்று சட்டமன்ற தேர்தல்: 25 வருட ஆட்சியை தக்க வைக்குமா கம்யூனிஸ்ட்?

Webdunia
ஞாயிறு, 18 பிப்ரவரி 2018 (08:06 IST)
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்தின் 59 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க கடந்த சில வாரங்களாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது

அதேபோல் மத்தியில் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் பாஜகவும் முதல்முறையாக திரிபுராவில் ஆட்சியை பிடிக்க பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி கூட்டணி இன்றி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றது

திரிபுராவில் 60 தொகுதிகள் இருந்தாலும் ஒரு தொகுதியின் வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால் மீதியுள்ள 59 தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. மொத்தம் 307 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் மாதம் 3ஆம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments