Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமிதாப்பச்சனை நான்கு கிலோ மீட்டர் துரத்திய புலி

அமிதாப்பச்சனை நான்கு கிலோ மீட்டர் துரத்திய புலி
, வியாழன், 8 அக்டோபர் 2015 (13:12 IST)
தேசிய பூங்காவில் அமிதாப்பச்சன் சென்ற போது, அவரது வண்டியை நான்கு கீலோ மீட்டர் தூரம் ஒரு புலி துரத்தி வந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


 
 
மும்பை நகரில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய உயிரியல் பூங்கா, சிங்கம்,புலி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
 
அந்த பூங்காவில் உள்ள சிறப்பு வேனில் விலங்குகளில் நடமாட்டங்களை ரசித்துக்கொண்டே நாம் செல்லலாம். அவ்வாறு, அமிதாப்பச்சன் செல்கையில், அவரது வண்டியை ஒரு புலி நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்தி வந்துள்ளது.
 
இது பற்றிய செய்திகளை அமிதாப் பச்சன்  தனது சமூகவலைத்தளங்களில் பதிவு செய்திருக்கிறார். புலி பின் தொடர்ந்து போது எடுத்த சில புகைப்படங்களையும் அதில் இணைத்திருக்கிறார். அது ஒரு சிலிர்ப்பான அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
சமீபத்தில்தான், புலிகளை காக்கும் விளம்பர தூதராக அமிதாப் நியமிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பான விழாவில் கலந்து கொள்ள அவர் அந்த பூங்காவிற்கு சென்றபோதுதான் அவருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil