Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொபைல் எண்களை ஆதாருடன் இணைக்கவில்லையா? இதோ 3 புதிய வழிகள்

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (23:15 IST)
ஆதார் எண்ணை பல்வேறு ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டிருக்கும் நிலையில் கடைசியாக மொபைல் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த இணைப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் முடியவேண்டும் என்ற கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.


 


இந்த நிலையில் இதுவரை மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க அந்தந்த தொலைத்தொடர்பு சேவை அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது வரும் டிசம்பர் முதல் மூன்று புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்று ஒன் டைம் பாஸ்வேர்டு என்ற முறை, இரண்டாவதாக ஆப் என்று கூறப்படும் செயலி முறை, மூன்றாவதாக ஐ.வி.ஆர்.எஸ் என்று கூறப்படும் குரல் பதிவுச்சேவை முறை என மூன்று முறைகளில் வரும் டிசம்பர் 1ஆம்தேதி முதல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைல் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments