Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு

Webdunia
செவ்வாய், 28 அக்டோபர் 2014 (17:47 IST)
சிறப்பு தரிசன நுழைவு சீட்டு விற்பனையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 10கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கடந்த 2010 ஆம் ஆண்டு 300 ரூபாய்க்கு சிறப்பு தரிசன நுழைவு சீட்டு விற்பனை முறை நடைமுறைபடுத்தப்பட்டது. இதன் மூலம் தினசரி 15 முதல் 25 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.50 லட்சமும், மாதம் ரூ.15 கோடியும், ஆண்டுக்கு ரூ.150 கோடியும் வருவாய் கிடைத்தது.
 

 
இந்நிலையில் 2014&15 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் திருப்பதிக்கு நேரில் வந்து பெறும் 300 ரூபாய்க்கான டிக்கெட் பெறும் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த டிக்கெட்டுகளை இணையதளம் வழியாக தினசரி 11ஆயிரம் பேருக்கு மட்டும் டிக்கெட் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
 
இந்த திட்டத்துக்கு போதிய வரவேற்பு இல்லாததால் இதுவரை 3.53 லட்சம் பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்துள்ளனர். இதனால் தேவஸ்தானத்துக்கு ரூ.21.46 கோடி வருவாய் வரவேண்டிய நிலையில், ரூ.11.35 கோடி வருவாய் மட்டுமே வந்துள்ளது. இதன் மூலம் 10 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments