Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி எம்பிக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (07:54 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது தெரிந்ததே. இந்தியாவில் இதுவரை மொத்தம் கொரோனா வைரஸால் 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திருப்பதி எம்பிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா மாநிலம் திருப்பதி மக்களவை உறுப்பினர் பல்லிதுர்கா பிரசாத் ராவ் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 
 
ஏற்கனவே திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 743 பேருக்கு பொருளற்று ஏற்பட்டதாம் அது 402 பேர் குணமடைந்து மீண்டும் பணியில் திரும்பியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது திருப்பதி எம்பிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments