Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதிக்கு ஜனவரி 1 வரை பக்தர்கள் வரவேண்டாம்: திருமலை தேவஸ்தானம்

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (10:56 IST)
திருப்பதிக்கு ஜனவரி 1 வரை பக்தர்கள் வரவேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது 
 
கிறிஸ்ட்ஜிமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி சொர்க்கவாசல் தரிசனத்திற்காகவும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் 
 
இந்த நிலையில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச தரிசன டிக்கெட் ஜனவரி 1 வரை வழங்கி முடிந்துவிட்டது என்றும் டோக்கன் முடிந்து விட்டதால் சொர்க்கவாசல் தரிசனத்திற்காக இனிமேல் திருப்பதிக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
 
மீண்டும் இலவச தரிசன டிக்கெட் ஜனவரி 2ஆம் தேதி மட்டுமே வழங்கப்படும் என்றும் டோக்கன் இல்லாமல் ஏழுமலையானை தரிசிக்க முடியாது என்பதால் பக்தர்கள் வருகை தந்து ஏமாற வேண்டாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது 
 
எனவே இதுவரை டோக்கன் வாங்காத பக்தர்கள் திருப்பதி செல்லும் திட்டமிருந்தால் அதை ரத்து செய்துவிட்டு ஜனவரி 2ஆம் தேதிக்கு பின் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments