Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் – திருமாவளவன் ஆதரவு !

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (13:57 IST)
மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை முன் வைத்துள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதிய மக்களவை உறுப்பினர்கள் அடங்கிய அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை தொடங்கி வைத்த மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஜூன் 19ஆம் தேதியன்று ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் மக்களவை உறுப்பினராக பதவி ஏற்பதற்கு இன்று டெல்லி செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய திருமா வளவன் மோடியின் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதில் ‘நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமா எனத் தெரியவில்லை. ஒருவேளை சாத்தியமானால் நல்லதுதான். கால விரயமும் தேர்தல் செலவுகளும் குறையும். இப்போது ஒவ்வொரு மாநிலத்துக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளியில் தேர்தல் நடக்கிறது. இதை எந்த அளவுக்கு சீர்செய்ய முடியும் எனத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர் நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு.. உச்சத்திற்கு செல்கிறது இந்திய பங்குச்சந்தை..!

24 சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல், துன்புறுத்தல்! கணித ஆசிரியர் போக்சோவில் கைது!

6 மாவட்டங்களில் காத்திருக்குது கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

சிந்து நதிநீரை திறந்துவிடாவிட்டால் இந்தியாவுடன் போர்: பிலாவல் பூட்டோ ஆவேசம்..!

ஈரான் - இஸ்ரேல் போரை நான் நிறுத்திவிட்டேன்: திருந்தாத டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments