’அதிர்ச்சி’ - மாயமான விமானத்தில் சென்றவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை
’அதிர்ச்சி’ - மாயமான விமானத்தில் சென்றவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை
மாயமான இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தை பற்றி மக்களவையில் அதிமுக உறுப்பினர் எம்.தம்பிதுரை கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் ராம்ராவ் பாம்ரே கூறியதாவது: ”சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள விமானப் படைத் தளத்திலிருந்து 29 பேருடன் கடந்த மாதம் 22-ஆம் தேதி புறப்பட்ட ஏ.என்-32 விமானம் திடீரென்று மாயமாகிவிட்டது.
அந்த விமானத்னைத் தேடும் பணி கடந்த 20 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஏராளமான விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கப்பல்கள் ஆகியவை இந்தத் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எனினும், இதுவரை அந்த விமானம் குறித்து எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை. அந்த விமானத்தில் சென்றவர்கள் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை” என்றார்.