Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்த விசித்திரக் குழந்தை

நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்த விசித்திரக் குழந்தை
, புதன், 19 நவம்பர் 2014 (17:02 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் விசித்திரக் குழந்தைப் பிறந்துள்ளது.
 
மேற்கு வங்கத்தில் உள்ள ஓர் கிராமத்தில் நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் விசித்திரக் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. உடனே இது குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அக்குழந்தையைப் பார்க்க வந்த வண்ணம் உள்ளனர்.
 
குழந்தையைப் பார்க்க மருத்துவமனைக்கு வரும் கூட்டம் அதிகரித்து வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறி வருகின்றனர். பிறப்பு குறைபாடு காரணமாக குழந்தை இவ்வாறு இருப்பதாக மருத்துவர்கள் கூறிய போதும், இக்குழந்தையின் குடும்பத்தினர் அதை கடவுளின் அவதாரமாகவே பார்க்கின்றனர்.
 
இது குறித்து அக்கிராமவாசி ஒருவர் கூறுகையில், 'நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் குழந்தை பிறந்திருப்பதாக செய்தி வந்தவுடன் முதலில் நாங்கள் சந்தேகப்பட்டோம். ஆனால் நேரில் பார்த்தபோது அந்த குழந்தையைக் கண்டு அதிசயித்துப்போனோம்' என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil