உத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு, டாக்டர் அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் தியாகத்தைச் சிறப்பிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகளும், அவரது பெயரில் விருதுகளும், தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்குப் பெயர் சூட்டியும் மரியாதை செய்து வருகிறது. அந்த வகையில், உபி. அரசு, மாநில தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு, டாக்டர் அப்துல் கலாம் பெயர் சூட்டி மரியாதை செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் மாநில தொழில் நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு, முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் என மாற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.
மேலும், இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள புதிய வளாகத்தில், டாக்டர் அப்துல் கலாம் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றார்.