Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய் மீது தாக்குதல் நடத்திய தந்தையைக் கொன்ற மகன் கைது!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (15:21 IST)
தாயைத் தாக்கிய தந்தையை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான ( சிவசேனா – பாஜக ஆதரவு  அணி) ஆட்சி நடைபெற்று வருகிறது.இம்மாநிலத்தின் தானே மாவட்டம் அபிர் நாத் என்ற பகுதியில் வசிப்பவர் ராஜேஷ்(52). இவர் தன்  மனைவி  மற்றும் மகன் பிரகாஷுடன் வசித்து வருகிறார்.

சில நாட்களாக ராஜேஷுக்கும், இவர் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு  இருந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது. அப்போது, ராஜேஷ் தன் மனைவியை தாக்கியுள்ளார்.

இதற்கு, பிரகாஷ் தன் தந்தையை கண்டித்துள்ளார். இருப்பினும் இது தொடர்ந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று ராஜேஷ் மீண்டும் தன் மனைவியைத் தாக்கியுள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த பிரகாஷ்( 19 வயது) , கூர்மையான ஆயுதம் கொண்டு தன் தந்தையை தாக்கியுள்ளார். இதில்,  ராஜேஷ் சம்பவ இடத்திலேயே  ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து பலியானார்.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரக்ஷா பந்தன் கொண்டாடிய ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி.. வைரல் புகைப்படம்..!

போதைப்பொருள் உற்பத்தி செய்ய ரகசிய ஆய்வகங்கள்.. மடக்கி பிடித்து கைது செய்த போலீஸ்..!

தவெக மதுரை மாநாடு: விஜய் மட்டுமே பேசுவார்.. காவல்துறைக்கு அளித்த தகவல்..!

3 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

வெனிசுலா அதிபரை கைது செய்ய உதவினால் ரூ.483 கோடி பரிசு: அமெரிக்க அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments