Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (22:01 IST)
அமெரிக்கா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் (இந்திய தொழில் கவுன்சில் கூட்டத்தில் ) கலந்து கொண்ட பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில், இந்தியா அதிக வாய்ப்புகள் உள்ளநாடாக வளர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

இந்தியாவில் நகர்ப்புறங்களை விட, கிராமப்புறங்களில் இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து துரிதமாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் தொழில் சிறப்பாக வளரவுள்ளதாகவும், வேளாணமை விவசாயத்துறை சிறப்பான வளர்ச்சியடையும் காலகட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் , சுயசார்பு திட்டத்தின் மூலம் இந்தியா உலகிற்கு பெரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தியுள்ளதாகவும் டிஜிட்டல் மயமாக்குதலையும் , 5 ஜி தொழில்நுட்பத்தையும் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்து வருவதாகவும், தொழில்நுட்பத்தில் 5 ஜி, பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகியவற்றில் வாய்ப்புகள் உள்ளனவாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments