Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (16:47 IST)
மத்திய அரசு அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி 1 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்ய இருக்கிறார்.
இந்த பட்ஜெட் மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் கடைசி பட்ஜெட் என்பதாலும் பாராளுமன்ற தேர்தல் வருவதாலும் இதில் பல்வேறு சலுகைகள் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது உள்ள தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளதாக இருக்கிறது. 
 
மேலும் ரூ . 2 5 லட்சம் வரையில் ஈட்டப்படும் தனிநபர் வருமானத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
 
அதாவது ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5% சதவீதமும், ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான வருமானம் பெறுபவர்களுக்கு 20  %சதவீதமும், 10 லட்சத்துக்குமேல் வருமானம் பெறுபவர்களுக்கு 30 % வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பு ரூ 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments