Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்.! விபத்தில் இருந்து தப்பிய அமித்ஷா..!

Senthil Velan
திங்கள், 29 ஏப்ரல் 2024 (17:11 IST)
பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி வருகிறார் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அந்த வகையில் பீகாரில் உள்ள பெகுசராய் பகுதியில் இன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். 
 
இதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் கிளம்புவதற்காக அருகில் உள்ள ஹெலிபேடிற்கு வருகை தந்தார். அங்கு தயாராக இருந்த ஹெலிகாப்டரில் அவர் ஏறி அமர்ந்ததும் ஹெலிகாப்டர் விமானி அதனை புறப்பாட்டுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்.
 
வானில் எழும்ப முயற்சித்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குமிங்கும் பறக்கத் துவங்கியது. சில நொடிகள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய ஹெலிகாப்டரை பின்னர் விமானி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதையடுத்து அசம்பாவிதம் எதுவும் இன்றி அமித் ஷா தனது பயணத்தை தொடர்ந்தார்.

ALSO READ: மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு.! காங்கிரஸின் திட்டம் பலிக்காது..! பிரதமர் மோடி உறுதி..!
 
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் மத்திய உள்துறை அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments