Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு..! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி.!!

Senthil Velan
புதன், 6 மார்ச் 2024 (16:06 IST)
புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி கடத்தி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சிறுமியை கடத்தி கொலை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
 
இதனிடையே சிறுமியின் சடலத்தை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து இருந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சிறுமியின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார். இதை அடுத்து சிறுமியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்
 
இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, வீடியோ பதிவு செய்யப்பட்டது. பின்னர் சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ALSO READ: தேமுதிக சார்பில் பேச்சுவார்த்தை குழு அறிவிப்பு.! அதிமுகவுடன் இன்று 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை.!!

இதனிடையே படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி தான்: டிடிவி தினகரன்

குழந்தையை மாட்டின் மடியில் பால் குடிக்க வைத்த பெற்றோர்.. நெட்டிசன்கள் விளாசல்..!

ஐடி கார்டு இல்லைன்னா உணவு விற்க அனுமதி இல்லை! ரயில்வே புதிய உத்தரவு! - அதிர்ச்சியில் சிறு வியாபாரிகள்?

பாலியல் உறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்