மகன் பட்டாசு வெடித்ததால் தந்தை கைது: டெல்லியில் முதல் நடவடிக்கை

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (13:38 IST)
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த தீர்ப்பை சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியது என்பது தெரிந்ததே. அதன்படி தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் மட்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு கொடுக்காமல் சட்ட விரோதமாக பட்டாசு வெடித்ததாக டெல்லியில் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  சுப்ரீம் கோர்ட் நேரக் கட்டுப்பாட்டுக்குப் பிறகு பதிவாகும் முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் கைது செய்யப்பட்ட நபர் பட்டாசு வெடிக்கவில்லை. அவரது மகன் தான் பட்டாசு வெடித்துள்ளார். மகன் பட்டாசு வெடித்ததை தந்தை தடுக்கவில்லை என்ற காரணத்தால் தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட தந்தைக்கு 6 மாதம் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments