Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாதிகளுக்கு மட்டும் தூக்கு தண்டனை: சட்ட ஆணையம் பரிந்துரை

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2015 (02:55 IST)
இந்தியாவில், தீவிரவாதிகளுக்கு மட்டும் தூக்கு தண்டனையை நிறவேற்ற வேண்டும் என  சட்ட ஆணையம் பரிந்துரைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுக ஆர்வலர்களும், மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.
 
இந்த கோரிக்கை குறித்து, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சட்ட ஆணையத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இதனையடுத்து, களத்தில் குதித்த சட்ட ஆணையம், மாநில அரசுகள், சட்ட நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறையினரிடம் கருத்துக்களை கேட்டறிந்தது. அதன்பேரில், அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது.
 
அதில், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் தீவிரவாதிகளுக்கு மட்டும் தூக்கு தண்டனையை நிறைவேற்றலாம். மற்ற தண்டனை கைதிகளுக்கு தூக்கு தண்டனை தேவையில்லை. அது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யலாம் என கூறப்பட்டுள்ளதாம். இந்த அறிக்கை இன்னும் சில நாட்களில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
 
உலகம் முழுவதும் உள்ள 98 நாடுகளில் மரண தண்டனை முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments