Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு நாட்டின் மிக உயரிய விருது !

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (21:18 IST)
மறைந்த சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 7 பேருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அறிவித்து கௌரவித்துள்ளது மத்திய அரசு.

சமீபத்தில் வரும் 25 ஆம் ஆம் தேதி குடியரசு தினவிழாவை முன்னிட்டு நாட்டின் மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருது பெறுபவர்களின் பெயரை அறிவிப்பதாக தகவல்கள் வெளியானது.

 இந்நிலையில், தற்போது இந்தாண்டில் பத்ம விபூஷன் விருது பெறுபவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

அதில், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி , மறைந்த ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே உள்ளிட்ட 7 பேருக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டிமன்ற பேச்சாளரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான சாலமன் பாப்பய்யா, வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம், படாகி பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோருக்கு  பத்ம ஸ்ரீவிருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானுகு பத்ம பூஷண் விருதும், கோவையைச் சேர்ந்த மறைந்த தொழிலதிபர் சுப்பிரமணியனுக்கு பத்ம ஸ்ரீவிருது அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments