Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு நாட்டின் மிக உயரிய விருது !

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (21:18 IST)
மறைந்த சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 7 பேருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அறிவித்து கௌரவித்துள்ளது மத்திய அரசு.

சமீபத்தில் வரும் 25 ஆம் ஆம் தேதி குடியரசு தினவிழாவை முன்னிட்டு நாட்டின் மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருது பெறுபவர்களின் பெயரை அறிவிப்பதாக தகவல்கள் வெளியானது.

 இந்நிலையில், தற்போது இந்தாண்டில் பத்ம விபூஷன் விருது பெறுபவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

அதில், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி , மறைந்த ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே உள்ளிட்ட 7 பேருக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டிமன்ற பேச்சாளரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான சாலமன் பாப்பய்யா, வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம், படாகி பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோருக்கு  பத்ம ஸ்ரீவிருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானுகு பத்ம பூஷண் விருதும், கோவையைச் சேர்ந்த மறைந்த தொழிலதிபர் சுப்பிரமணியனுக்கு பத்ம ஸ்ரீவிருது அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments