Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்நிலைய பிளாட்பார்மில் இளம்பெண்ணில் சடலம்! மக்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (16:21 IST)
கர்நாடக மாநிலம் பெங்களூரில் யஷ்வந்த்பூர் ரயில்  நிலையத்தின் பிளாட்பாரத்தில் ஒரு இளம்பெண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பெங்களூர் மாநகரத்தின் யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தின் 1 வது பிளாட்பாரத்தில் உள்ள ஒரு டிரம்மில் இன்று காலையில் அதிக  நாற்றம் வந்துள்ளது.

இதன் அருகில் சென்று பார்த்த துப்புறவு பணியாளர்கள் அதில், ஒரு இளம்பெண்ணில் சடலம் அழுகிய நிலையில் இருப்பதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்து, போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தப் பெண் யாரென்று இன்னும் கண்டுப்பிடிக்கப்படாத நிலையில், இந்த  பெண் கொலை, அல்லது தற்கொலை செய்யப்பட்டு 2 நாட்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகிறது. போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 2வது நாளாக உயரும் பங்குச்சந்தை.. ஆனால் ஒரு சிக்கல்..!

ஷாங்காய் மாநாட்டில் ஹீரோவான மோடி.. கண்டுகொள்ளப்படாமல் பரிதாப நிலையில் பாகிஸ்தான் பிரதமர்..!

செருப்புக்குள் பதுங்கியிருந்த பாம்பு.. பெங்களூருவில் ஐடி ஊழியர் பரிதாப பலி..!

தி.மு.க. ஆட்சியில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

முதல்வரின் ஜெர்மனி பயணம் வெற்றி.. ₹7,020 கோடி மதிப்புள்ள முதலீட்டு ஒப்பந்தங்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments