Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினகரன் கைது விவகாரம்: தமிழிசை, எச்.ராஜா கூறியது என்ன?

தினகரன் கைது விவகாரம்: தமிழிசை, எச்.ராஜா கூறியது என்ன?
, புதன், 26 ஏப்ரல் 2017 (04:10 IST)
ஒருங்கிணைந்த அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னதை பெற லஞ்சம் வழங்கியதாக கூறப்பட்ட புகாரில், டிடிவி தினகரன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், இன்று அவருடைய வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


 


இந்த நிலையில் தினகரனின் கைது நடவடிக்கை பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என தினகரன் தரப்பினர் கூறியுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை 'தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் இருப்பதால் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டம் தன் கடமையை செய்தே தீரும். அவர்கள் மீது குற்றங்களை வைத்துக் கொண்டு எப்படி பாஜகவை குறை கூற முடியும். தினகரன் தமிழகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி தந்துள்ளார்' என்று கூறினார்.

அதேபோல் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது சமூக வலைத்தளத்தில் 'தமிழ்நாட்டில் இனி பல அரசியல் திருப்பங்கள் காத்திருகிறது எனவும், அடுத்தது அமைச்சர்களா?? எனவும் பதிவு செய்துல்லாஆற். எனவே, அடுத்ததாக அமைச்சர்கள் யாரேனும் கைது செய்யப்படுவார்களா? தமிழகத்தில் அடுத்து நடைபெறவுள்ள அரசியல் திருப்பங்கள் என்ன? என்ற பெருM எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிடிவி தினகரன் கைது: டெல்லி போலீசார் அதிரடி நடவடிக்கை