Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டு கேட்க சென்ற வேட்பாளருக்கு கத்திக்குத்து! – தெலுங்கானாவில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (16:13 IST)
தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளன.

அவ்வாறாக தெலுங்கானா மாநிலம் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சேர்ந்த வேட்பாளர் பிரபாகர் ரெட்டி வாக்கு சேகரிக்க சென்றார். ஏற்கனவே எம்.பியாக இருந்த பிரபாகர் ரெட்டி வரும் சட்டமன்ற தேர்தலில் துபாக் பகுதியில் போட்டியிடுகிறார்.

இதற்காக தேர்தல் பரப்புரைக்காக சித்திப்பேட் பகுதிக்கு சென்ற பிரபாகர் ரெட்டியை மர்ம நபர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கத்தியால் குத்திய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments