Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்க்கு சோறு வைக்காத தம்பி; அடித்து கொன்ற அண்ணன்! – கேரளாவில் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (12:01 IST)
கேரளாவில் தனது செல்லமான வளர்ப்பு நாய்க்கு உணவளிக்காத தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் 27 வயதான ஹக்கீம். இவருக்கு ஹர்ஷத் என்ற சகோதரர் ஒருவரும் உள்ளார். ஹக்கீம் நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். சமீபத்தில் வெளியூர் சென்ற ஹக்கீம் தனது தம்பி ஹர்ஷத்திடம் நாய்க்கு உணவு வைக்க சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

ALSO READ: ஒரு கொய்யாப்பழத்துக்காக கொலை..? உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

ஆனால் ஹர்ஷத் நாய்க்கு உணவு வைக்காததாக கூறப்படுகிறது. இதனால் திரும்ப வந்த ஹக்கீம் ஆத்திரத்துடன் தனது தம்பியை தாக்கியுள்ளார். பெல்ட் மற்றும் கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு தாக்கியதால் ஹர்ஷத்திற்கு எலும்புகள் உடைந்ததுடன், உள்காயங்களும் ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஹக்கீம் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்துள்ளனர். நாய்க்கு உணவு வைக்காததற்காக தம்பியையே அண்ணன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments