Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா..! 3-வது முறையாக ஆட்சி அமைப்போம்.! பிரதமர் மோடி..!!

Senthil Velan
சனி, 16 மார்ச் 2024 (17:31 IST)
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் 18- வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
2024 லோக்சபா தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது என்றும் இந்த தேர்தலில் போட்டியிட பா.ஜ., - என்.டி.ஏ., முழுமையாக தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

நல்லாட்சி மற்றும் மக்கள் சேவையில் எங்களின் சாதனைகளின் அடிப்படையில் மக்கள் மத்தியில் செல்வோம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.  

ALSO READ: எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல்..? முழு விவரம் இதோ..!!
 
140 கோடி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 96 கோடி வாக்காளர்களின் முழு அன்பையும் ஆசிர்வாதத்தையும் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் ஆட்சி அமைப்போம்  என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments