செயற்கைக் காலில் பணம் பதுக்கிய பிச்சைக்காரர் : திடுக்கிடும் சம்பவம்

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (16:24 IST)
பெங்களூர் ரயில் நிலையத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஷெரீப் என்பவர் சில ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்தார். நேற்று தான் வழக்கமாக பிச்சை எடுக்கும் அதே இடத்தில் சடலமாக இறந்து கிடந்தார். அதனால் அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ஷெரீப் சடலத்தைக் கைப்பற்றினர். பின்னர் அதே அதே இடத்தில் இருந்த அவரது செயற்கைக் காலை எடுத்த போது அது கனமாக இருக்கவே உள்ளே சோதனை செய்தனர். 
 
அதில் 500 ரூபாய் நோட்டுகள், 200 ரூபாய் நோட்டுகள், 100 ரூபாய் நோட்டுகள் 50 ரூபாய் நோட்டுகள் ,10 ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டனர். அத்துடன் பல சில்லறை காசுகளும் இருந்தன.
 
இதனையடுத்து மொத்த பணத்தையும் போலீஸார் எண்ணிய போது அதில் ரூ. 96000 இருந்தது தெரியவந்தது. 
 
ஷெரீப்பின் தங்கை ஹைதராபாத்தில் இருப்பதை அறிந்த போலீஸார் அவருக்கு இதுகுறித்த தகவல் தெரிவித்தனர். 
 
மேலும் இயற்கைக்கு மாறான இறப்பாக போலீஸாரெ ஷெரிப்பின் மரணத்தை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments