Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

Senthil Velan
வியாழன், 16 மே 2024 (16:13 IST)
ஜம்மு காஷ்மீரில்  ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 4  பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்து வருவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகளை  தேடும் பணி அப்பகுதியில் நடைபெற்று வருகிறது. 
 
பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து, பயங்கரவாதிகள் ஊடுருவலை முறியடித்துள்ளனர். இதற்கிடையே அம்ரோஹி, தங்தார் ஆகிய பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது இரண்டு கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள் ஆகியவை மீட்கப்பட்டன.

ALSO READ: மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

பாரமுல்லா தொகுதியில் மே 20ம் தேதி மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதனால் காஷ்மீரில் குப்வாரா மற்றும் பாரமுல்லா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments