Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டில்லியை தாக்க தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 13 ஜூன் 2014 (14:56 IST)
தலைநகர் டில்லியில் மிகப் பெரிய குண்டு வெடிப்பு நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குண்டு வெடிப்புகளை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதை உளவுத்துறை கூறியுள்ளது.
 
இந்த தாக்குதலை சுதந்திரதின கொண்டாட்டத்தின் போதோ அல்லது அதற்கு முன்போ தலைநகர் டில்லியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து, உளவுத்துறை அனுப்பியுள்ள தகவலில், ‘வடக்கு டில்லியில் உள்ள சாந்தினி சவுக் பகுதியில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக‘ தெரிவித்துள்ளனர். மேலும் டில்லியின் மற்ற பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், ‘வாரணாசி, மதுரா, அயோத்தி ஆகிய மூன்று நகரங்களிலும் பெரிய அளவில் குண்டு வெடிப்புக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக‘ கூறப்படுகிறது.
 
இந்த நாசவேலை திட்டத்தை தீட்டிய அமைப்பு பற்றிய தகவலை உளவுத்துறை தெரிவிக்கவில்லை. உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
 
இதை தொடர்ந்து, டில்லி, மதுரா, அயோத்தி, வாரணாசி ஆகிய 4 நகரங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தர விட்டார். அத் தொடர்ந்து, அந்த 4 அடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments